இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்துக் கண்மாய்களுக்கும் வைகை நதி தண்ணீரை திறந்துவிடக் கோரியும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்து விளங்குளத்தூர் கண்மாய்க்கு கே. ஆர். பட்டிணம், ஆலம்பகோட்டை வழியாக வரும் வைகை ஆற்று நீர் முழுவதும் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவாசாயிகள் சங்கம் மற்றும் கிராமமக்கள் சார்பாக வெள்ளியன்று வெண்ணீர் வாய்க்கால் விலக்கு ரோட்டில் மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.கணேசன் தலைமை வகித்தார். 600 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.