tamilnadu

img

நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2 ஆம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்

திருநெல்வேலி, ஏப்.6- தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள  துலுக்கர்பட்டி கிராமமும் அடங் கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள  துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென் கரையில் அமைந் துள்ளது. இந்த தொல்லியல் மேடா னது விளாங்காடு என்றழைக்கப் படுகிறது. இந்த  தொல்லியல் மேடா னது, சுமார் 2.5 மீ உயரம், 36 ஏக்  கர் பரப்பளவில் விரிந்து காணப்படு கிறது. இந்த தொல்லியல் தளமா னது சிவகளை, ஆதிச்ச நல்லூ ருக்கு சமகால கட்டமாகும். இங்கு  2 ஆம் கட்ட அகழாய்வு பணியினை  மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையத் துறை முதன்மைச் செயலா ளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும்  தொல்லியல் துறை ஆணையர் சிவா னந்தம் வழிகாட்டு தலின்படி, அக ழாய்வு இயக்குநர் வசந்தகுமார், அகழாய்வு இணை இயக்குனர் காளீஸ்வரன் தலைமை யில் அக ழாய்வுப் பணி நடை பெற்றது. நிகழ்ச்சியில் ஆனை குளம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பஞ்சாயத்து தலைவர் அசன், அரசு ஒப்பந்ததாரர் ஷேக், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.  பின்னர் மாவட்ட ஆட்சியர்  கார்த்திகேயன் செய்தியாளர்களி டம் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து பகுதி களையும் உள்ளடக்கி வர லாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அக ழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்  டுள்ளது. அதன்படி பண்டையத்  தமிழ் சமூகத்தின் தொன்மை, பண் பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு 8 இடங்களில் தொல்  லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு பணிகள்  இன்று (வியாழன்) ஆரம்பிக்கப் பட்டன.

தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்  பட்ட பண்பாடு 2,600 ஆண்டுகளுக்கு  முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அக ழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கடந்த ஆண்டு 11.2.2022 பொருநை ஆற்றின் ஈடாக நம்பி யாறு படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 8 மாதங்  கள் நடைபெற்ற இந்த அகழாய்வில் 17 குழிகள் அமைக்கப்பட்டு இது வரை 109 தொல் பொ ருட்கள் கண்டெ டுக்கப்பட்டுள்ளன. வெள்ளி முத்திரைக் காசுகள், செம்பிலான பொருட்கள், இரும்பில் ஆன பொருட்கள், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், நீலக்கல் கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகிய முக்கிய தொல்பொருட்கள் ஆகும். தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2 ஆம் கட்ட மாக அகழாய்வு பணிகள் இன்று (வியாழன்) தொடங்கின.

ஆய்வின் நோக்கம்

இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறி வது ஆகும். நம்பி ஆற்றங் கரை யில் இரும்பு கால பண்பாட்டின் வேர்  களைத் தேடுவதே இவ்அகழாய் வின் நோக்கமாகும். நம்பியாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு  தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. நெல்லை மாவட்டத்தின் நாங்கு நேரி, ராதாபுரம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆற்றில் பழங்காலத்தில் பல வர லாற்று சிறப்புமிக்க சிவன் கோவில் கள் இருந்ததாகவும், பண்டைய மக்களின் வாழ்வியல் இடமாக இருந்ததாகவும், பண்பாட்டுக் கூறு கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளன. இந்த நம்பியாறு படுகை பண்டைய தமிழர்களின் தொன்மையான நாக ரீகத்தின் தொட்டில் ஆகவும், வியா பாரத் தளமாகவும், ஆன்மீக தலமாக வும் பல அரசர்கள் ஆட்சி செய்யும் இடமாகவும் திகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாக தான் இன்றும்  இந்த பகுதியில் ராஜாக்கள் வாழ்ந்த  இடம் ராஜாக்கமங்கலம் என்றும், தளபதிகள் வாழ்ந்த இடம் தளபதி சமுத்திரம் என்றும், இரணியன் என்ற அரசன் வாழ்ந்த இடம் இரணி யன் குடியிருப்பு என்றும் பல தொல் லியல் சிறப்புடைய பகுதிகள் இங்கு அமைந்துள்ளன என்று அவர் கூறி னார்.