tamilnadu

img

அகவிலைப்படி உயர்வு கேட்டு 10 மையங்களில் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னை, செப். 26 - 8 வருடங்களாக உயர்த்தப் படாமல் உள்ள அகவிலைப் படியை உயர்த்தக்கோரி செவ்வா யன்று (செப்.26) தமிழகம் முழு வதும் போக்குவரத்து ஓய்வூதி யர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். போக்குவரத்து கழகங்களில் உள்ள ஓய்வூதியர்களுக்கு 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உள்ளனர். 8 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வு நிலுவையை வழங்க வேண்டும், மருத்துவப்படியை 300 ரூபாயாக  உயர்த்த வேண்டும், குறைந்தபட்ச  ஓய்வூதியம் 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும். ராணுவ குடும்ப ஓய்வூதியத்து டன் கழக குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலைப் படி வழங்க வேண்டும், மருத்து வக் காப்பீடு திட்டத்தை உடனடி யாக செயல்படுத்த வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியாக 50  ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,  ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை தீர்வை செய்ய வேண்டும், ஓய்வூதியத்திற்கு அரசே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, 1ந்தேதியே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், 2022 நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பலன் களை வழங்க வேண்டும், ஊதிய  ஒப்பந்த உயர்வு நிலுவைகளை தர வேண்டும், நீதிமன்ற தீர்ப்பு களை எதிர்த்து தேவையற்ற முறையீடுகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 10  மையங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை பல்லன் இல்லம் முன்பும் போராட்டம் தொடங்கியது. அப்போது, செய்தியாளர்க ளிடம் பேசிய தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எஸ்.கிருஷ்ணன், அரசின் பிற துறை ஓய்வூதி யர்களுக்கு அகவிலைப்படி உடனுக்குடன் உயர்வு வழங்கும் அரசு, போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மட்டும் மறுக்கிறது. எனவே, கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார்.  இந்தப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் கே. கர்சன் நல அமைப்பின் பொரு ளாளர் வரதராஜன், துணைத் தலைவர் ஏ.ரைமண்ட், சென்னை  கிளைத் தலைவர் டி.குருசாமி, பொதுச்செயலாளர் கே. வீரரா கவன், பொருளாளர் எஸ்.ஆதி மூலம் உள்ளிட்டோர் பேசினர்.