tamilnadu

img

உச்சத்தை எட்டிய தக்காளி விலை: பொதுமக்கள் அவதி

சென்னை, ஜூலை 2- தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி யுள்ளனர். தக்காளி வரத்து குறைந்ததால் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய தக்காளி யின் விலை ஜூன் மாத இறுதியில் ரூ.100 என்ற அளவில் உச்சத்தை எட்டியது.   அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சனிக் கிழமை ஒரு கிலோ ரூ. 90 என்ற அளவி லும், சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றுக்கு ரூ.120 என்ற அளவிலும் தக்காளி விற்பனையானது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்து,  கோயம்பேடு காய்கறிச் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ. 140 வரை விற்பனை செய்யப்பட்டது.தக்காளி யின் விலை தொடர்ந்து அதிகரித்து வரு வதால் ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர். இதனிடையே, விலையேற்றம் காரண மாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பசுமைப் பண்ணைக் கடைகளில் வெளி சந்தையை விட சற்று குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், திங்களன்று (ஜூலை 3) அரசு அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொள்ளவுள்ளார்.இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் தக்காளி விலைக் குறைப்பு, நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து  விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.