tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு விழா: இன்று மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை, ஜூன் 2- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  3ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு  100ஆவது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவ தும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட தமிழ்நாடு அரசு தரப்பிலும், திமுக கட்சி சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை (ஜூன் 3) மாலை 5மணியளவில் புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில்  பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மாவட்டச் செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வரவேற்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு  எம்.பி., முதன்மை செயலா ளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், தமிழக  காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீர மணி, மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல்.திருமா வளவன், பேராசிரியர் காதர் மொய்தீன், ஜவாஹி ருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கூட்டணி கட்சி  நிர்வாகிகள் கலந்து  கொண்டு உரையாற்று கின்றனர்.