புதுதில்லி, மார்ச் 15- மக்கள்தொகை கணக்கெடுப்பு வெறும் தரவு சார்ந்ததாக இருக்கக்கூடாது; மாறாக அது கலாச்சாரம் மற்றும் சமூகக் கண்ணோட்ட த்தை பிரதிபலிக்க வேண்டும் என உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது. கேள்வித்தாள் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்களைப் பெறும் முறை இன்னும் தொடர்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 2021-22-ஆம் ஆண்டு ரூ.3768.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2022-23-ஆம் ஆண்டில் ரூ.3,676.00 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்பு தொடர் பான சில பணிகள், தரவு மையங்களை மேம் படுத்துதல் மற்றும் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துதல் போன்ற சில பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அதனால் 2022-23 ஆம் ஆண்டிற்கு 3,676 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் எஞ்சியுள்ள பணிகள் மற்றும் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நிதியாண்டில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உள்துறை விவகாரக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா பரவியதால், 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பிற தொடர்புடைய கள நடவடிக்கை கள் மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப் பட்டிருந்தது. வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தரவு சேகரிப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படு கிறது. ஒரு கணக்கெடுப்பாளர் மொபைல் ஆப் மூலம் நேரடியாகவோ அல்லது அவரது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தியோ தரவைச் சேகரித்து சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இணைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டால் வழக்கம் போல் கேள்வித்தாள் களை வழங்கி விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகள் பட்டியல், வீட்டுக் கணக் கெடுப்பு மற்றும் மக்கள் தொகைக் கணக்கெ டுப்பு ஆகியவற்றின் போது சுய-கணக்கெடுப்பு கான ஆன்லைனிலும் பதிவுசெய்யலாம். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா வில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, 2020 ஏப்ரல் தொடங்கி செப்டம் பர் வரையில் வீடுவாரி கணக்கெடுப்பை நடத்த வும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிப்ரவரி 2021-ல் தொடங்க வும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக் கெடு 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதமே அறிவிக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.