பிரேசில் நாட்டில் 1921 செப்ட ம்பர் 19 அன்று பிறந்தவர் கல்வியாளர் பாவ்லோ பிரையர். வறுமை, பசி, பிணியை இளம் வயதிலிருந்தே சந்தித்து, அதிலிருந்து பெற்ற அனுபவத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அதிகம் சிந்தித்தவர், எழுதியவர். பொதுவாக நம் கல்விமுறையை ‘வங்கி முறைக் கல்வி’ என்று அழைத்தார். வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வது போல், ஆசிரியர் மாணவர்களின் மூளையில் சில தகவல்களை டெபாசிட் செய்கின்றனர் என்றார். நம் கல்வி முறை மனிதர்களின் இயல்பான அறிவை மழுங் கடித்து, ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றார்போல் இயந்திரங்களாக மாற்றி, மனிதத்தன்மையை அடையாமல் தடுத்து விடுகிறது என்கிறார். ஆசிரியர் - மாணவர் உறவுமுறை குறித்து அதிகம் ஆய்வு செய்தவர். 1962 இல் பிரச்சனை அடிப்படையிலான கல்விமுறை, உரையாடல் மூலமான கல்வி முறை ஆகிய இரண்டு வடிவங்களில் கல்வியை சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும் என 300 கரும்பு விவசாயிகளை அழைத்துக்கொண்டு கல்விப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
அது முன்னூறு, 3 ஆயிரம், 30 ஆயிரம் என பரவத் தொடங்கியது. அன்றைய பிரேசில் நாட்டில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பம், இராணுவத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக பிரேசில் அரசு மாறியது. அந்தச் சூழலில் பாவ்லோ பிரையரின் கல்விப் பணிக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு பொலிவியாவிற்கு நாடு கடத்தினர். ஆனாலும் அவ ரது பணி தடைபடாமல் நீடித்தது. 1968 இல் “ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி முறை” என்ற புத்தகத்தை போர்த்துகீசிய மொழியில் எழுதினார். 1975 ஆம் ஆண்டு வரை அப்புத்தகம் பிரேசிலில் தடை செய்யப்பட்டி ருந்தது. 1970 இல் ஸ்பா னிஷ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்யப்பட்டது. 2008 இல் ஆய்ஷா நடராசனால் தமிழாக்கம் செய்யப்பட்டது. 1970 இல் ஜெனீவா நாட்டிற்கு அழைக்கப் பட்டார். அங்கு அவர் சர்ச்சுகளின் உலக மாநாட்டில் சிறப்பு கல்வி ஆலோசகராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இந்த நேரத்தில், பிர பலமான கல்வி மற்றும் கல்வியறிவு சீர்திருத்தங் களை செயல்படுத்த பல நாடுகளுக்கு உதவுவதற் காக உலகம் முழுவதும் பயணம் செய்தார். பிரேசிலில் அவர் தலைமையில் துவங்கப்பட்ட எழுத்தறிவு இயக்கம் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் பரவியது. தமிழகத்தில் அறிவொளி இயக்கம் என்ற பெயரிலும் அமலானது. 1997 மே 2 அன்று இதயநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தொடர்ந்து மாற்றுக் கல்வி தளத்தில் ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செலுத்திய பாவ்லோ பிரை யரின் கல்விச் சிந்தனைகளை, இன்றைய சூழ லில் அனைத்து ஆசிரியர்-மாணவர், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து கல்விசார் செயல்பாட்டாளருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற வணிகமயம், மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்தியத்துவமயம், ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை வலியுறுத்தும் பாசிசமயம் என்ற முக்கிய மூன்று நோக்கத்தை மையப்படுத்தி அமலாகும் புதிய தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் ஆபத்தை எதிர்க்கும் சூழலில் பாவ்லோ பிரையர் போன்ற மாற்றுக் கல்வி கொள்கையாளர்களை முன்னிலைப் படுத்துவது அவசிய தேவையாகும்.
- எஸ்.மோசஸ் பிரபு