tamilnadu

img

வாக்குச்சாவடியில் இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றக் கூறிய பாஜக முகவர் வெளியேற்றம்

மாநில தேர்தல் ஆணையர்

இச்சம்பவம் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார்  கூறுகையில்,  “இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்களது மத நம்பிக்கை யை பின்பற்ற உரிமை உள்ளது. என்ன உடை அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும் என்பது அவரவரின் விருப்பம். மத அடையாளங்களு டன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை .மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த வருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மதுரை ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆட்சியர் அறிக்கையின் அடிப்படையில் சம் பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை, பிப்.19- மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் எட்டாவது வார்டில்  முஹமது யாசின்  (திமுக), முத்து கிருஷ்ணகுமார் (அதிமுக),  அம்சவேணி (பாஜக) உட்பட ஆறு பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நாளான சனிக்கிழமையன்று அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த முஸ்லிம்  பெண்ணின் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி  பாஜக  வேட்பாளரின் முகவர் கிரிராஜன் தகராறு செய்தார்.  இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சி முகவர்கள் எதிர்த்தனர். பாஜக முகவரின் செயலைக் கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் முக வர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குப் பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிதுநேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை யடுத்து பாஜக முகவர் கிரிராஜனை காவல் துறையினர் எச்சரித்து, வாக்குப் பதிவு மையத்திலிருந்து வெளியேற்றினர்.

அவரு க்குப் பதில் உஷா என்பவர் வந்ததும்  வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சம்பவத்தையடுத்து கூடுதல் காவல்துறையி னர் அந்த வாக்குச்சாவடியில் பணியமர்த்தப் பட்டனர். இது பற்றி திமுக நிர்வாகி ஒருவர் கூறு கையில், பாஜக முகவர் கிரிராஜன் வாக்குப் பதிவு தொடங்கியது முதல் வாக்களிக்க வந்தவர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். மாஸ்க்கை கழற்று, ஹிஜாப்பை கழற்று வாக்காளரின் முகம் தெரியவில்லை எனக் கூறி பிரச்சனை செய்தார். கிரிராஜன் இதே பகுதியைச் சேர்ந்தவர் தான். முஸ்லிம்கள் அதிகமுள்ள வார்டு என்ப தும் அவருக்குத் தெரியும். இதற்கு முந்தைய  காலங்களிலும் அவர் தேர்தல் பணியாற்றி யுள்ளார். இந்த முறை திட்டமிட்டு தகராறு செய்தார் என்றார். ஹிஜாப்பை அகற்றச் சொல்லி தகராறு செய்த கிரிராஜன் மீது, உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவை சீர்குலைத்தல், வாக்கா ளர்களின் உரிமையைப் பறித்தல், வாக்குச் சாவடி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மததுவேஷம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையிலடைக்க வழி வகை உள்ளது என்கின்றனர் வழக்கறிஞர்கள். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மத அடையாளங்களுடன் வாக்குப் பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்த னையும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.