நிலுவையில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
வலகக் கூட்டரங்கில் முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள், துணை முதல்வரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மருத்துவம், வருவாய், நில அளவை, தாட்கோ, பிற்படுத்தப்பட்டோர் நலன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, உயர் கல்வி, பள்ளி கல்வி, வேளாண்மை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பொதுப்பணி, கட்டடம் மற்றும் நீர்வளம், நெடுஞ்சாலைத் துறை போன்ற அனைத்துத் துறைகள் வாரியாக பொதுமக்களின் நிலுவையிலுள்ள கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.