திருநெல்வேலி, ஜன.28 - கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் கடந்த டிச. 2 வரை ஒரு லட்சம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் அணு உலை நிர்வாக இயக்குநர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: “கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் தற்போது இயங்கி வரும் 2 அணு உலைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அணு ஆற்றல் சக்தியின் அபரிதமான முன்னேற் றத்தின் வளர்ச்சியாகும். 1 ஆவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்ட 60,852 மில்லியன் யூனிட், 2 ஆவது அணு உலை மூலம் 46,813 மில்லியன் யூனிட் மின்சாரம் என கடந்த டிசம்பர் மாதம் வரை ஒரு லட்சத்திற்கும் மேலான மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக 86 மில்லியன் கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் கலப்பது தடுக்கப்பட்டது. இந்நிலையில் 3, 4 ஆவது அணு உலைகளின் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 76 சதவீத பணிகள் கடந்தாண்டு இறுதியில் முடிவடைந்து உள்ளன. 2026 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 5 மற்றும் 6 ஆவது அணு உலைகளின் பணிகள் 33 சதவீதம் கட்டுமானப் பணி களோடு வேகமாக நடந்து வருகிறது. அணு உலைகளின் மின் உற்பத்தி சாத னைக்கு, அதில் ஈடுபட்டு வரும் இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் விஞ்ஞானி கள் மற்றும் பிற பணியாளர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். அணு உலை நிர்வாகம், கூடங்கு ளம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி களில் உள்ள கிராமங்களின் முன்னேற்றத்தில் அக்கறையுடன், மக்க ளின் கல்வி, மருத்துவம், குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வகை பொது பயன் பாடுகள் போன்ற உட்கட்டமைப்பு களுக்காக தற்போது வரை ரூ.124 கோடி சமூக நல மேம்பாட்டு நிதியின்கீழ் செல விடப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.