சமீபத்தில் ஒன்றிய அரசின் உள்துறைச் செயலர் தலைமையில் ஒரு கூட்டம் நடை பெற்றுள்ளது. அதில் பிரதம மந்திரி விஞ்ஞானிகளுக்கானஅறிவியல் விருதுகளை பரி சீலனை செய்து மாற்றி அமைக்கக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் படி எட்டு அறிவியல் துறைகளின் செய லர்கள்/இயக்குநர்கள் என 16 நபர்கள் பங்கு பெற்றுள்ளனர். ஒவ்வொரு துறையிலும் வழங்கப் படும் விருதுகள், கல்வி உதவித் தொகைகள், ஆராய்ச்சி உதவித் தொகைகள் குறித்து ஒவ்வொரு துறையினரும் எடுத்துரைத்துள்ளனர்.அதன் பின்னர் ஒவ்வொரு துறையிலும் விருதுகள் பற்றிய முடிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி
1. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தற்போது 207 விருதுகள் இருக்கிறதென்றும் அதில் நான்கு தேசிய விருதுகள் என்றும்,97 தனியார் நன்கொடை (எண்டொமெண்ட்) விருதுகள் என்றும், 54 ஸ்காலர் ஷிப்/ஃபெல்லோஷிப் விருதுகள் என்றும் 56 இத் துறையில் உள்ளோருக்கு வழங்கும் விருது என்றும் குறிப்பிடப்பட்டது.இவை அனைத்தும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஸ்காலர்ஷிப்/ஃபெல்லோஷிப் விருதுகள் மாற்றி அமைக்கப்படும் என பரிந்துரைக் கப்பட்டது.
2. அணுசக்தித் துறையில் 25 விருதுகள் பொதுத் துறை நிறுவனங்களுக்கு உள்ளதென்றும் 13 பிற துறை சார் விருதுகள் உள்ளதென்றும் அறிவிக்கப் பட்டு அனைத்தையும் முடித்து வைப்பதென்றும் மிகச் சிறந்த ஒரு விருது வழங்கலாம் என பரிந்துரைக்கப் பட்டது. 3.விண்வெளித் துறையில்
3 துறை சார் விருதுகள் உள்ளதென்றும் அனைத்தையும் ஒழித்து விட்டு தேசிய அளவில் ஒரு உயர் விருது அளிப்பது என முன் மொழியப்பட்டுள்ளது.
4.உயிரித் தொழிநுட்பத் துறையில் 6 ஃபெல் லோஷிப் விருதாக உள்ளதென்றும் அது ஃபெல்லொஷிப்பாக தொடரலாம் என கூறப்பட்டுள் ளது.தேசிய உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருது தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
5.அறிவியல் தொழிலுற்பத்தித் துறையில் 7 விருதுகள் உள்ளதென்றும் இதில் 6 விருதுகள் கைவிடப்பட்டு மிக முக்கியமான எஸ்.எஸ்.பட் நாகர் விருது தொடரும் எனவும் ஆனால் அதன் வழிமுறை கள் மொத்த நிதியாகவோ அல்லது 15 வருடங்களுக்கு மட்டும் மாதாந்திரம் வழங்குவதெனவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
6.புவிஅறிவியல் துறையின் சார்பாக 4 விருது கள் உள்ளதென்றும் அதில் 3 விருதுகளை நிறுத்துவ தென்றும் விஞ்ஞானி அன்னாமணி விருதை பெண்கள் குழந்தைகள் வளர்ச்சித் துறையில் இணைப்பதென கூறப்பட்டுள்ளது.
7.நலவாழ்வு குடும்ப நலத்துறையில்
8 தேசிய விருதுகளும் 9 தனியார் எண்டொமெண்ட் விருது களும் 51 செவிலியருக்கான நைட்டிங்கேல் விருதுக ளும் 3 உணவு தர விருதுகளும் 3 தேசிய மருத்து வக் கவுன்சில் விருதுகளும் உள்ளதென்று அறிவிக் கப்பட்டது. நைட்டிங்கேல் விருதுகள் சீரமைக்கப்படும் என்றும் பிற அனைத்து விருதுகளும் நிறுத்தி வைப்ப தெனவும் பரிந்துரைக்கப்பட்டது.மிக உயரிய விரு தான பி.சி.ராய் விருது சீரமைப்பு செய்யப்பட்டு உயரிய விருதாக மாற்றப்படுமாம். 8.நல வாழ்வு ஆராய்ச்சித் துறையில் 37 விரு துகள் உள்ளதென்றும் இதில் 32 எண்டொ மெண்ட் விருது நீக்கப்படும் என்றும் அம்பேத்கர், சுபாஷ் முகர்ஜீ விருதுகளும் நீக்கப்படும் என்றும் ஒரு விருது ஆராய்ச்சிஉதவி நிதியாக வழங்கப்படும் எனவும் இத் துறையின் சார்பாக ஒரு உயரிய விருது வழங்குவதெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சில விருதுகளின் முக்கியத்துவம்
இதில் எஸ்.எஸ்.பட்நாகர் விருது, அன்னா மணி விருது, பி.சி.ராய் விருது ஆகியன மிகவும் பெருமை மிக்க விருதுகளாகும். இம்மூவரும் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளாகத் திகழ்ந்தவர்கள். எஸ்.எஸ்.பட்நாகர் இந்திய அறிவியல் தொழிலுற் பத்திக் கவுன்சிலின் (CSIR) முதல் இயக்குநர் ஆக நியமிக்கப்பட்டவர். அன்னா மணி இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் முதல் இயக்குநர். டாக்டர் பி.சி.ராய் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் சுயமாக மருந்து உற்பத்திக்கான,ஆய்வுக்கான பெங்கால் கெமிக் கல்ஸ் & பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தை உருவாக்கி யவர் ஆவார்.இந்த சிறப்பினை பெருமைப்படுத்தும் வகையில் இந்த மூன்று விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எஸ்.எஸ்.பட்நாகர் விருது 45 வயதுக்குட்பட்ட ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படும் பெருமை மிகு விருதாகும். அன்னாமணி விருது பெண் விஞ்ஞானி களுக்கான விருது ஆகும். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்தது இனிமேல் அது பெண்கள் குழந்தைகள் நலத் துறை யுடன் சேர்க்கப்படுகிறது. பி.சி.ராய் விருதும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இப்பெருமைமிகு விருது களை எப்படி மாற்றி அமைப்பார்கள் என்பது புதிராக உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட விருதுகள் இந்த பிரசித்தி பெற்ற விருதுகளுடன் சேர்ந்து நீக்கப்பட உள்ளன.
ஏன் இந்த விருதுகள் நிறுத்தப்படுகின்றன?
1.தற்போது இவ் விருதுகளை ஏன் நீக்குகிறார்கள் என்று கேட்டால் முக்கியமாக விருது தேர்வுகளில் பாரபட்சம் இருக்கிறது, திறந்த முறையில் இல்லை எனவும் விருது வழங்கும் முறையை மாற்றி அமைக்க பிரதமர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தேர்வு முறையில் சில கேள்விக்குரியதாக இருந்தாலும் பெரும்பான்மையான தேர்வுகள் தகுதி உள்ளவர்களுக்குத் தான் வழங்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.
2.தற்போதைய சூழலில் நிதிச் சுமை குறைப்பு நடவடிக்கை என்றாலும் இதற்காக ஒதுக்கப்படும் நிதி அவ்வளவு ஒன்றும் பெரிய தொகைகள் இல்லை யென்றும் பல விருதுகள் தனியார்களின் நிதிக் கொடை மூலம் தான் அளிக்கப்படுகின்றன என் கின்றனர்.
3.மேலும் ஏகப்பட்ட விருதுகள் இருப்பதால் அவை கள் உரிய மதிப்புக் கொடுப்பதாகத் தெரியவில்லை என்பதால் பெருமதிப்புமிக்க ஒரு சில விருதுகள் வழங்கினால் போதும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது பாரத் ரத்னா, கேல் ரத்னா போல் விஞ்ஞான் ரத்னா என மெச்சும் விருதுகள் வழங்கலாம் என கருதப்படுகிறது.
4.ஒவ்வொரு துறையும் சுயமாக இவ்விருதுக ளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்றன. இதில் தேர்ந் தெடுக்கப்படும் விஞ்ஞானிகள் அரசின் கொள்கைக ளை விமர்சனம் செய்பவர்களாகவும் இருக்கின்ற னர் எனக் கருதி இனி வரும் காலங்களில் மையப்படுத் தப்பட்ட தேர்வு முறை மூலம் தற்போதைய அரசின் கொள்கைக்கேற்றபடி செயல்படும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விருதாக மாற்றி அமைக்க விரும்பு கின்றனர் எனவும் கூறுகின்றனர்.
5.நம் காலத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் பெயர்க ளில் வழங்கப்படும் விருதுகளை மாற்றி தற்போ தைய ஒன்றிய அரசு பண்டைய பெருமை பேசும் கதா பாத்திரங்களான வியாசர், தன்வந்திரி, பதஞ்சலி போன்ற பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. 6.இறுதியாக ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் கூறியபடி ஒவ்வொரு துறையும் வழங்கும் ஆராய்ச்சி நிதி அனைத்தையும் தேசிய ஆய்வு நிதியின் கீழ் கொண்டு வர இருப்பதால் ஒவ்வொரு துறையின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் அனைத்து ஸ்காலர்ஷிப், ஃபெல்லோஷிப் ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் வாய்ப்பி ருக்கிறது. இதில் தனியார் வழங்கும் நிதிக் கொடையை இணைக்கவும் புதிய நிதி திரட்டப்படவும் தனியார் நிறுவங்களுக்கும் நிதி உதவி செய்யும் திட்டமும் இந்த தேசிய ஆராய்ச்சி நிதித் திட்டத்தில் இருக்கிறது எனக் கருதுகின்றனர்.