கேரள மக்களின் பண்டிகையாம் ஓணத் திருவிழாவின் மாநில அளவிலான வார விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உற்சாகமிக்க விழாவில் துவக்கி வைத்தார். விழாவில் உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய், திரைக்கலைஞர் ஃபஹத் பாசில், அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், வி.சிவன் குட்டி, பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீக்கதிர் சிறப்பிதழுக்கு கேரள முதல்வர் வாழ்த்துச் செய்தி
ஓணம் என்பது நம் சமூகத்தில் சமத்துவமும், செழிப்பும் நிலவிய ஒரு கருத்தியல் சகாப்தத்தை நினைவூட்டுகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படாத காலம் இது என்று நம்பப்படுகிறது. அத்தகைய காலகட்டத்தை நினைவுகூர்வது, நமது தற்போதைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் சிறந்த ஆதாரமாகும். தீக்கதிர் நாளிதழ் வாசகர்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.
பினராயி விஜயன், கேரள முதல்வர்