tamilnadu

img

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சையை கண்காணிக்க அதிகாரி

சென்னை, மே 16- கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் களின் சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு  தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச் சியை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணி யன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், டெங்கு, மலேரியா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. டெங்கு,  மலேரியா நோய் இல்லாத மாநில மாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1,70,300 பேருக்கு டெங்கு பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. இந்த  ஆண்டு இதுவரை 2,426 பேருக்கு  டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட் டுள்ளது. ஆனால் டெங்குவால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இறப்பு இல்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். டெங்கு ஒழிப்பு பணியில் 20,480 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். போதிய மருந்துகள், உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது. கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் விழிப்புணர்வும் இதில் அதிகம் தேவை என்றார். கள்ளச்சாராயம் அருந்தியதில் 13  பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66  பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அதில் 55 பேர்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையிலும், திண்டிவனத்தில் 5 பேரும்,  ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும், புதுவை தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 66 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மெத்தனால் வேதிப்பொருள் பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக் கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.