tamilnadu

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி

சென்னை,டிச. 24- தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்  வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். மேலும், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனை வரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;