மதுரை, ஜூலை 4- மின்அரங்க (சிஐ டியு) ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரும் முதுபெரும் தோழரு மான கே.இராஜப்பன் (84) வெள்ளியன்று இரவு மதுரையில் கால மானார். 1998- ஆம் ஆண்டு மின்வாரி யத்தில் இருந்து ஓய்வு பெற்று பழங்கா நத்தம் பகுதிகுழுவில் இணைந்து கட்சிப் பணியாற்றிவந்தார். இந்த நிலையில் வெள்ளியன்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை பழங்காநத்தம், தெற்குத்தெரு, நேதாஜி நகரில் உள்ள அவரது இல்லாத்தில் காலமானார் அவ ரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் மா.கணேசன், பகுதிக் குழு செயலாளர் கா. இளங்கோவன், மூத்த தோழர் வி.கே.பழனி, பகுதிகுழு உறுப்பினர்கள் ஆர். பெரியசாமி, ஏ.பி. சிவராமன், சக்திவேல், கிளைச் செயலா ளர்கள் கோபால், கண்ணன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.