புதிதாக உருவாகும் தீயணைப்பு ஆணையம்
சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஆக.31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல்துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ளார். இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் மட்டும் அல்லாமல், ஏராள மான உயிர் இழப்புகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது. இதுபோன்ற விபத்துகள் மற்றும் பேரழிவு தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். அதை அடிப்படையாக வைத்து புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி கள் துறை இயங்கும். அதுமட்டும் அல்லாமல் தீயணைப்புத் துறைக்கு தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக உருவாக்கும் தீய ணைப்பு ஆணையத்துக்கு சங்கர் ஜிவால் தலைவராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.