ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தையொட்டி சிஐடியு, ஏஐஆர்எப், எச்எம்எஸ், என்எப்ஐஆர், ஐஎன்டியூசி, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐசிஎப் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன், ஏஐடிஎப் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், என்எப்ஐஆர் பொதுச் செயலாளர் ஜே.சூரிய பிரகாசம், எச்எம்எஸ் அகில இந்திய தலைவர் சி.ஆர்.ராஜா ஸ்ரீதர் உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.