என்.சங்கரய்யா வாழ்த்து
வலதுசாரி, பிரிவினை வாத, மதவாத சக்திகள் தேசத்தை பின்னோக்கி இழுக்க முயலும் இந்த வேளையில், நமது ஐன நாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு பாரம்பரியத்தை முன்னெடுக்க இந்த நூல் உதவும். மதவாத சக்திகளுக்கு இந்திய விடுதலை போராட்டத்தில் எவ்வித பங்கும் கிடையாது. விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் இடை யூறுகளைதான் செய்து வந்தனர். விடுதலை போராட்ட காலத்தில் எவ்வாறு சாதி, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணைத்து போராடினோமோ, அதைப்போல் மதச்சார்பின்மை, ஜனநாயகம், முற்போக்கு பயணத்திற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொது மக்களை திரட்டுவதற்கான கூடுதல் ஆயுதமாக இந்த நூல் வெளிவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னை, டிச. 10 - சிறப்பானதொரு இதழியல் படைப்பாக ‘தி லாஸ்ட் `ஹீரோஸ்’ புத்தகம் வெளி வந்துள்ளதாக ‘இந்து’ என்.ராம் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர்கள் என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, பகத்சிங் ஜூகைன், மல்லுசுவராஜ்யம் உள்ளிட்ட 15 ஆளுமைகளின் பங்களிப்பை விவரிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் ‘தி லாஸ்ட் `ஹீரோஸ் - ஃபுட் ஜோல்சர்ஸ் ஆப் இந்தியன் ஃபிரீடம்’ நூலை எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (டிச.9) சென்னையில் நடைபெற்றது. நூலை ‘இந்து’ என்.ராம் வெளியிட்டு பேசியதன் சுருக்கம் வருமாறு: ‘தி இந்து’ பத்திரிகையின் விவசாய துறை ஆசிரியராக இருந்த நேரத்திலேயே பல விருதுகளை பெற்று, பிரபல மானவராக சாய்நாத் இருந் தார். இருப்பினும் வருடத்தில் 250 நாட்களுக்கு மேல் அவர் கிராமங்களில் நேரடியாக கள ஆய்வு செய்து, நிலவரங் களை அறிந்து கொள்வதில் செலவிட்டார். கள நிலவரங் களை நேரடியாக தெரிந்து, அதை சரியாக வெளிக் கொண்டு வருவதை சாய்நாத் கடைபிடித்து வருகிறார். அதன் வெளிப்பாடாக ‘ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக் கிறார்கள்’ எனும் அவரது முந்தைய நூல் அமைந்திருந் தது.
நீண்டகால உழைப்பின் வெளிப்பாடாக இந்த நூல் வந்துள்ளது. குக்கிராமங்களி லும், வெளியே தெரியாத நிலை யிலும் இருந்து பல விடுதலை போராட்ட வீரர்களை சாய்நாத் எவ்வாறு கண்டடைந்தார் என்பதே வியப்பாக உள்ளது. இந்நூலை படித்த முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா வியந்து பாராட்டினார். இந்தப் புத்தகத்தில் பல புதிய புதிய விஷயங்கள் உள்ளது. இதில் விவரிக்கப்பட்டுள்ள ஆளுமை கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்கு உண்மை யாக செயல்பட்டு, அதில் இறு திவரை உறுதியாக இருந் துள்ளனர். விடுதலை போராட்ட வீரர்க ளுக்கு வழங்கப்படும் ஓய்வூ தியத்தை ஏன் வாங்கவில்லை என்று என்.சங்கரையாவிடம் கேட்டபோது, “நாங்கள் தேச விடுதலைக்காகத்தான் போராடினோமே தவிர, பென்ஷனுக்காக அல்ல” என்கிறார். இந்த நூல், வர லாற்றை தொகுத்து வழங்கும் சிறப்பானதொரு இதழியல் படைப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பி.சாய்நாத்
நூலாசிரியர் பி.சாய்நாத் தமது ஏற்புரையில், “ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் படிக்க சென்ற இந்தியர்கள், அங்கு ரூசோ உள்ளிட்டவர் களை படித்து அதன் மூலம் விடுதலைக்கான சிந்தனையை இந்தியாவில் விதைத்தனர் என்று பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் விடுதலைக்கான போராட்டம் அதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் துவங்கிவிட்டது. ஆதிக்க சக்தி களின் பக்கமாக நின்றே வரலாறுகள் எழுதப்பட் டுள்ளன. அதன் விளைவாக எளிய மக்களின் விடுதலை போராட்ட பங்களிப்பு மறைக் கப்படுகிறது. இவற்றை யெல்லாம் மறுவாசிப்பு செய்யும் விதமாகவே இந்த நூல் ஆக்கம் பெற்றுள்ளது” என்றார். இந்நிகழ்வில் நூலை அறிமு கம் செய்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சம்சீர்அகமது, பத்திரிக்கையாளர் செந்தளிர், கல்லூரி மாணவி ஷாலினி ஆகியோர் பேசினர். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.