உலகின் உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி!
சென்னை, ஜூன் 23 - தமிழ்நாட்டின் விருதுநகரைச் சேர்ந்த 35 வயது பெண் முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெருமைக்குரியவர். கல்பனா சாவ்லா விருது பெற்றவர்; தமிழ்நாடு அரசால் அங்கீ கரிக்கப்பட்டவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாராட் டைப் பெற்றவர். தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட முத்தமிழ்ச்செல்வி, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகும், மலை ஏறுவதில் இருந்த பேரார்வத்தால் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிக உயரமாக சிக ரங்களை ஏற முற்பட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் மட்டுமல்ல, உலகின் உயரமான சிகரங்களை ஏறிய முதல் தமிழ்பெண் என்ற சாதனையையும் படைத்து உள்ளார் முத்தமிழ்ச்செல்வி. துணை முதலமைச்சர் வாழ்த்து இவருக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரி வித்திருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலை களில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி முத்தமிழ்ச்செல்வி. உயிரை பணயம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுக்கள். ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும், அதில் உள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார். அவருடைய வெற்றிப் பயணத் திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள் கிறோம். தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உய ரங்களை தொட அவரைப் போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். கனிமொழி எம்.பி., “உலகின் உயரமான மலைகளை ஏறிக் கடந்து சாதனை படைத்துள்ள விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வில் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் சிகரத்தை அடைய, அவர் தொட்ட சிகரம் ஒரு புதிய உந்துசக்தி. அவர் மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “உலகின் ஏழு கண்டங் களிலும் உள்ள உயரமான சிகரங்களின் உச்சத்தை அடைந்து சாதனை படைத்திருக்கும் நம் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்விக்கு எனது நெஞ்சார்ந்த பாராட் டுகள். இடைவிடாத தனது உழைப்பின் வழி முத்தமிழ் செல்வி அவர்கள் செய்திருக்கும் இந்த அளப்பரியச் சாத னையானது, லட்சியத்தோடு உழைத்து வரும் இளைஞர் களுக்கு உத்வேகமளிக்கக் கூடியதாக அமையும். இச்சாத னையைப் போல் இன்னும் பல சாதனைகள் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரி வித்துள்ளார்.