tamilnadu

img

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகம்

சென்னை, ஜூன் 6- சென்னை காமராஜர் சாலையில்  மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சி யகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகளின் தற்போ தைய நிலை குறித்தும் ஆய்வு மேற் கொண்டார். அதனைத் தொடர்ந்து, தென்னிந் தியாவிலேயே முதல்முறையாக “அனைத்தும் சாத்தியம்”என்ற பெயரில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில் நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள் ளது.

மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யிலும், பொதுமக்களுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த  அருங்காட்சியகம் வழிவகை செய்கி றது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன்  வசிக்கக்கூடிய ‘மாதிரி இல்லம்’ வடி வமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த  அருங்காட்சியகமானது பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப் பாளர்களின் சமூகத்துடனான தொடர்பு களை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 21 வகையான மாற்றுத் திறன் கொண்ட நபர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங் களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற இந்த  அருங்காட்சியகம் உதவுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறைச் செயலாளர் லால்வேனா, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.