tamilnadu

img

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

விழுப்புரம், செப்.25- விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே நெடி கிராமத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி ஆலகிராமம் வழியாக தடம் எண் -24 அரசு டவுன் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.25) புறப்பட்டு சென்றது.ஆல கிராமத்தின்  வயல் வழி சாலையில் சென்றபோது  எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு  வழி விட பேருந்தை ஒதுக்கிய போது, அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அய்யனார் உள்பட 45 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் மற்றும் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

;