சிபிஎம் கேரள மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக திங்களன்று (பிப்.21) கொடிநாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி கிளைகள் முதல் பல்லாயிரக்கணக்கான மையங்களில் கொடியேற்றப்பட்டது. மாநிலக் குழு அலுவலகமான ஏகேஜி சென்டர் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் கொடியேற்றினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனத்தல வட்டம் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.