மோடி அரசே, மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்துக; நீதி விசாரணைக்கு உத்தரவிடுக!
ஜூன் 2 - சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆர்ப்பாட்டம்!
சென்னை, மே 26 - அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பிறகும், மாவோயிஸ்டுகளை என்கவுண்ட்டர் மூலம் கொத்துக் கொத்தாக படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்; இந்த படுகொலைகள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 2 அன்று சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐஎம்எல்(லிபரேசன்) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்ட றிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், அவர்கள் கூறி யிருப்பதாவது: கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடினால் ஒடுக்குமுறையா? ஒன்றிய அரசும், பாஜகவின் சத்தீஸ்கர் மாநில அரசும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஆயுதப் படைகளை கொண்டு தீவிரமாக அழித்து ஒழித்து வரு கின்றன. கடந்த மே 22 அன்று ஒரு நாள் மட்டும் 27 பேர் கொடூரமான முறை யில் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்ன பிறகும், ஒன்றிய - மாநில அரசுகள் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மலை வளம், இயற்கை வளம், கனிம வளம் கார்ப்பரேட் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படும் நிலை யில், அதனை எதிர்த்துப் போராடி வரும் பழங்குடி மக்களையும், அவர்களது போராட்டங்களை ஆதரித்து, உதவி வருபவர்களை யும் முற்றிலுமாக அப்புறப்படுத்தும் அதிகார அத்துமீறலே இந்த அழித்தொழிப்பு ஆகும். மாவோயிஸ்ட் வழிமுறை ஏற்றுக்கொள்ள முடியாததே! அதேபோன்று பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வுரி மைக்காக, வன உரிமைகளுக்காக போராடுகிற போது அடர்ந்த உள் வனக் காட்டுப்பகுதியில் அவர்களுக்கான பாதுகாவலர்களாக மாவோயிஸ்டுகள் செயல் படுவதை அதிகார வர்க்கம் ஏற்கவில்லை. மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளையும், ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களையும், நடைமுறைகளையும் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய நான்கு கட்சி களும் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். மாற்றுக் கருத்துக்காகவே அழித்தொழிக்க உரிமையில்லை அதேநேரம், மாற்றுக் கருத்து கொண்டிருப்ப வர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது என்ற பயங்கரவாத செயல்களை அனுமதிக்க முடியாது. அப்படியான நடைமுறை நாகரிக, ஜனநாயக வழிமுறை அரசின் அடையாளமாக இருக்க முடியாது. அங்கு காட்டுமிராண்டித் தனமே எஞ்சி நிற்கும். பாஜக அரசுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக் கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடி யாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அர சியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். இது எல்லாவற்றையும் விட மலை யில் உள்ள வளங்களை தனியாருக்கு கொடுப்பதை உடனடியாக ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் கை விட வேண்டும். இதுவரை நடந்துள்ள போலி மோதல்கள் குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 02.06.2025 திங்கட்கிழமை அன்று சென்னை யில் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சி கள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று தீர்மானித்து இருக்கின்றன. அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, ஜன நாயகத்திற்காக, பழங்குடியின மக்களின் உரிமைக்காக நடைபெறும் நியாயமான போராட் டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.