tamilnadu

img

ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்

சென்னை,ஜன.6-  ‘தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ரவி தான். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரம் குறித்து செய்தியாளர் களிடம் அமைச்சர் சிவ சங்கர், சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. பாரம்பரியமாக தமிழக சட்ட சபையில் என்ன நிகழ்வுகள் நடக்குமோ, அதே நிகழ்வுகள் தான் தொடர்ந்து நடக்கி றது. அதனை மாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார். அது நடக்காது என்பதா லும், உரையை ஆளுநர் வாசித்தால், திமுக அரசின் சாதனைகளை அடுக்க வேண்டும் என்பதாலும், இந்த சாதனைகளை மக்க ளிடம் கொண்டு செல்லக் கூடாது என்ப தற்காகத் தான் அவர் இப்படி நடந்து கொண்டார். 59 பக்கங்களில் அரசின் சாதனைகள் விரிவாக இருக்கிறது. அதனை படிப்பதற்கு தயங்கிக் கொண்டு தான், இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.  தேசபக்தியில் தமிழக மக்களை மிஞ்சி,அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடை யாது. தேசத்திற்காக தமிழ கத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உயிரை அர்ப்பணித்துள்ளார்கள். இதுவரையில் எத்தனை ஆளுநர்கள், முதல்வர்கள் இருந்துள்ளார்கள். அவர்க ளுக்கு எல்லாம் தேசபக்தி கிடையாதா? அதிமுக ஆட்சியில் கூட தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கும் சட்டசபை கூட்டம், முடிவில் தேசிய கீதம் இசைக் கப்படும். அதைத்தான் தற்போதைய அர சும் செய்கிறது. எனவே, தேசிய கீதத்தை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. ஆளுநர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.