tamilnadu

img

தீக்கதிர் சந்தா அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிப்பு இயக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தீக்கதிர் சந்தா தொகையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசனிடம் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், மாவட்டக்குழு உறுப்பினர் என்.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.