மன்னார்குடி, ஜூலை 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக் குழு சார்பில் தியாகி பூந்தாழங்குடி பக்கிரி நினைவகம் மற்றும் பூந்தா ழங்குடி ஏ.கோவிந்தராசு நினைவு தின கொடி கம்பம், கல்வெட்டு திறப்பு விழாக்கள்நடைபெற்றன. ஒன்றியச் செயலாளர் கை. ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் ஏ.கோவிந்த ராசு நினைவு தின கொடிக்கம்ப கல்வெட்டை மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன் திறந்து வைத்தார். தியாகி பூந்தாழங்குடி பக்கிரி நினைவகத்தை விதொச மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.கணேசன், செய லாளர் மன்னன் மணி, வி.லட்சு மணன், எம்.திருஞானம் உள்ளிட் டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமாரராஜா, தோழர் ஏ.கோவிந்த ராசுவின் மகன்கள் கோ.முரு கானந்தம், கோ.சிவானந்தம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் உரை யாற்றுகையில், “தியாகி பூந்தாழ ங்குடி பக்கிரி, தோழர் ஏ.கோவிந்தராசு ஆகியோரின் நினைவு நாள் கட்சிக்கு பெருமை தரும் நிகழ்ச்சிகளாகும். மக்க ளுக்கான உழைப்பின் மூலம் இப்பகுதியின் செல்வாக்கு பெற்ற தலைவராக மிளிர்ந்த தோழர் ஏ.கோவிந்தராசு, ஒரு பண்ணையாரிடம் பண்ணைக் கூலியாக இருந்தார். பின்பு, அதே பண்ணையாரை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். இதனால் செங்கொடி இயக்க தலைவர்களை மக்கள் மிக உயர்வாக கருதினர்.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தின் வர்க்கப் போராட்டத்தில் முதன் முதலாக துப்பாக்கி குண்டிற்கு இரையானவர் இம்மண்ணின் தோழர் பக்கிரி. இப்படிப்பட்ட மகத்தான தலை வர்கள் வாழ்ந்து, உழைப்பாளி மக்களுக்காக போராடி உயிரைத் தியாகம் செய்த மண் இந்த பூந்தாழங்குடி” என்றார். வீ.அமிர்தலிங்கம் பேசுகை யில், “ஒன்றுபட்ட தஞ்சை தரணி யில் கூனிக்குறுகி கிடந்த பண்ணை அடிமைகளை, தன்னு யிரை தியாகம் செய்து தலை நிமிரச் செய்த தியாகி பக்கிரி யின் நினைவகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக, உட்காருவதற்குக்கூட நில மின்றி இருந்த 5 லட்சம் உழைப் பாளி மக்களுக்கு நில உரிமை பெற்றுத் தந்தது இவரின் மகத்தான போராட்டங்கள். எண்ணற்ற தியாகங்களால் செங்கொடி இயக்கத்தின் மூலம் இவை சாத்தியமாக்கப் பட்டுள்ளன. அதேபோல இப்பகுதியின் வாழும் வரலாறாக இருந்து, கடந்தாண்டு மறைந்த தோழர் ஏ.கோவிந்தராசு இப்பகுதி மக்க ளின் உரிமைகளுக்காக, பாது காப்பிற்காக, முன்னேற்றத்திற் காக அரும் பணியாற்றினார். ஆனால் தோழர் ஏ.கோவிந்தராசு உள்ளிட்டோர் தியாகம் செய்து பெற்ற உரிமைகள் இன்று கேள்விக் குறியாக்கப் பட்டுள்ளன” என்றார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசுகையில், “வாய் இருந்தும் பேச முடியாத வர்களாக, கண் இருந்தும் பார்க்க முடியாதவர்களாக, மனிதர்கள் என்ற தகுதியைக்கூட பெற முடி யாத அடிமை நிலையில் இருந்த காலத்தில், இந்த அவலத்தை ஒழித்துக் கட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த பூந்தாழங்குடி போராட்டக் களம். இக்களத்தின் போராட்ட நாய கர்களாக தியாகி பூந்தாழங்குடி பக்கிரியும், கோவண்ணா என்று அழைக்கப்படும் தோழர் ஏ. கோவிந்தராசுவும் திகழ்கின்ற னர்” என்றார்.