சென்னை, ஜன.25- ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த திங்கட் கிழமை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதனன்று காலை 11.30 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்த லில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமன தாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய் வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங் கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக “ஒன்று கூடுவோம் மு.க. ஸ்டாலின்; வென்று காட்டுவோம் ஈவிகேஎஸ் இளங்கோ வன்; தமிழ்நாடு வாழ்க” என்று கமல்ஹாசன் பதி விட்டுள்ளார்.