tamilnadu

img

மால்கம் எக்ஸ் நூற்றாண்டு விழா புரட்சியாளரின் செய்தி

மால்கம் எக்ஸ் நூற்றாண்டு விழா புரட்சியாளரின் செய்தி 

ஆர்.சிங்காரவேலு

மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் 1925 மே 19-ல் பிறந்தார். 1965 பிப்ரவரி 21-ல் மறைந்தார். அமெரிக்க கருப்பின புரட்சிவாதியான இவர் ஒரு சர்வதேசவாதி. வெள்ளையின மேலாதிக்கம், முதலாளித்துவம், ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டங் களில் தனது ஆயுளை அர்ப்பணித்தவர்.  மனித உரிமைகளின் முன்னோடி  மால்கம் எக்ஸ் ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்கம் மூலமே இத்தகைய அமைப்புகளை வீழ்த்த முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.  அவரது பொன்மொழிகள்  “2.2 கோடி ஆப்பிரிக்க வம்சாவளி அமெரிக்கர்களின் பொதுவான லட்சியம் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்பதே. அமெரிக்கா நமக்கு மறுத்து வருகிற மனித உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். நமது மனித உரிமைகளை முதலில் நிலைநாட்டாமல் அமெரிக்காவில் நாம் சிவில் உரிமைகளைப் பெற முடியாது. நாம் முதலில் மனிதர்களாக அங்கீகரிக்கப்பட்டால்தான் குடிமக்களாக அங்கீகாரம் பெற முடியும்.” “இறுதியாக ஒடுக்கப்பட்டோருக்கும் ஒடுக்குவோருக்கும் இடையே மோதல் நடக்கும் என நான் நம்புகிறேன். சுதந்திரம், நீதி, அனைவருக்கும் சமத்துவம் நிலைநாட்ட விரும்புவருக்கும் சுரண்டல் அமைப்பைத் தொடர விரும்புபவருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என நான் நம்புகிறேன்.”