tamilnadu

நகைக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளை தளர்த்துக: இரா.முத்தரசன்

சென்னை,ஜன.16- நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்த னைகள் தளர்த்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத் ்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 13.9.2021 ஆம் தேதி சட்டமன்றத்தில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். அதில் நகைக்கடன்கள்குறித்து, பகுப்பாய்வு செய்து. நிபந்தனைகள் விதித்து, கடன் தள்ளுபடி பெறுவதற் ்கான தகுதிகள் நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி கடன் தள்ளு படியால் அரசுக்கு 6 ஆயிரம்கோடி ரூபாய் செலவாகும் என்றும் அறிவித் ்தார். அதாவது நகைக் கடன்களில் 72 விழுக்காட்டிற்கும் அதிகமாக கடன்கள் தள்ளுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 48,84,726 நகைக் கடன்களில் 10,18,66 கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதுமுந்தைய ஆட்சிகாலத்தில் கடன் வழங்கு வதிலும், பெறுவதிலும் தவறு நடந்தி ருப்பதை கண்டறிந்து தடுக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத் துக்கு இடமில்லை. அது உறுதியாக மேற்கொள்ள வேண்டும். அதேசமயம் ஏஏஒய் குடும்ப அட்டை பெற்றுள்ள, வறுமைக் கோட்டுக் ்கும் கீழே வாழும் குடும்பங்கள் நகைக்க டன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று அறிவித்திருப்பதை அரசு மறுபரி சீலனை செய்ய வேண்டும். பரம ஏழையாக இருந்தாலும் சிரமப்பட்டு சேமித்து, கொஞ்சமாவது நகை வாங்கு வதும் அணிவதும் தமிழர் பண்பாடு என்பதை அரசு கருத்தில் கொண்டு, ஏஏஒய் குடும்ப அட்டைதாரர் குடும்பங் ்களுக்கும் 5 சவரன் வரையானநகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் வகை யில் புதிய அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.