tamilnadu

மதுரையின் மத நல்லிணக்க, மக்கள் ஒற்றுமை பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம் !மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள்

மதுரையின் மத நல்லிணக்க, மக்கள் ஒற்றுமை பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்! மதச்சார்பற்ற  கட்சிகள் வேண்டுகோள்

தமிழ்க் கடவுள் முருகனை வைத்து கலவரத்திற்கு திட்டம் போடும் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம்

மதுரை, ஜூன் 18 - முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில், ஆர்எஸ்எஸ்-சின் பிரிவி னைவாத அரசியலை கிளப்பி, மதுரை யின் அமைதி, மக்களின் ஒற்றுமையை குலைக்க முயற்சி நடக்கும் சூழலில், அதனை முறியடிக்கும் வகையில், மதுரையின் மத நல்லிணக்க, மக்கள் ஒற்றுமைப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம் என மதச்சார்பற்ற கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதொடர்பாக திமுக மாவட்டச் செய லாளர் கோ. தளபதி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக் குழு செயலாளர் மா. கணேசன், காங்கி ரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத்  தலைவர் கார்த்திகேயன் எம்.சி., மதிமுக  மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் முனியசாமி, சிபிஐ மாநகர் மாவட்டச் செய லாளர் எம்.எஸ். முருகன், விசிக மாவட்டச்  செயலாளர் ரவிக்குமார், சிபிஐ (எம்-எல்)  லிபரேசன் மாவட்டச் செயலாளர் மதி வாணன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரம் நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாடு, ஒரு ஆன்மீக நிகழ்ச்சி அல்ல. மாறாக, பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து  வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே  ஆகும். அவர்களது நோக்கம் ‘கடவுள் பக்தி அல்ல. கலவர உத்தியே!’ ஆகும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். முருகனை வைத்து கலவரத்திற்கு திட்டம் பாஜக பரிவாரம் ஒவ்வொரு மாநிலத் திற்கும் ஒரு அவதாரத்தை எடுத்து மக்க ளிடையே பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்த முயல்கிறது. பிள்ளையார் சதுர்த்தி, ராமர் கோவில் என்பன போன்ற  அவர்களது சித்து வேலை தமிழ்நாட்டில் எடுபடாததால், தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துகிறோம் என்று மாய் மாலம் செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரம் அனைத்து வகையிலும் தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. சங்க இலக்கிய பாடல் கள் எடுத்துரைக்கும் தமிழர் நாகரீகம் மற்றும் வாழ்வியலுக்கான பொருண்மைச்  சான்றுகளை கீழடி அகழ்வாய்வு எடுத்து ரைக்கிறது. கீழடி குறித்து அறிவியல்பூர்வ மாக செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கூட  வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்க் கடவுள் முருகன் என்று கூறிக் கொண்டே மறுபுறத்தில், இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கம் காட்டு கிறது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு. இந்தித் திணிப்பை ஏற்க  மறுத்ததால் தமிழ்நாட்டுப் பள்ளிப் பிள் ளைகளுக்குத் தர வேண்டிய நிதியைக் கூட தர மறுக்கிறது. மாநாட்டை மதுரை மக்கள் புறக்கணிப்பது உறுதி பல்சமய பன்மைத்துவத்தின் அடை யாளமாக திகழ்கிற திருப்பரங்குன்றம் மலைக்கு ஆபத்து என்று இல்லாத ஒன்றை பொல்லாத வகையில் பொய்ப் பிரச்சாரம் செய்த பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு தான், பல்லுயிர்  சூழலியல் மண்டலமாகவும், பண்பாட்டுச்  சின்னமாகவும் விளங்குகிற அரிட்டாபட்டி  மலையை வேதாந்தா என்ற கார்ப்பரேட் முதலாளிக்கு கைமாற்றி விட முயன்றது என்பதை தமிழ்நாட்டு மக்களும், மதுரை  மாவட்ட மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களின் மத நல்லிணக்க பாரம்பரியத்தை சீர்குலைப் பதற்காக ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரி வாரத்தால் நடத்தப்படும் மாநாட்டை உண்மையான பக்தர்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களும் புறக்கணிப் பார்கள் என்பது உறுதி. காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மாநாட்டிற்கு அனுமதி அளித் துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பல்வேறு நிபந்தனை களை விதித்துள்ளது. ஆனால், இந்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கவை அல்ல என்று இப்போதே பாஜக, ஆர்.எஸ்.எஸ்.  பரிவாரம் அடாவடி செய்கிறது. நீதிமன்றம்  விதித்துள்ள நிபந்தனைகள் முழுமை யாக பின்பற்றப்படுவதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறோம். வெறுப்பு அரசியலை விசிறி விடுவதற்காகவே நடத்தப்படும் இந்த நிகழ்வினால் மக்கள் ஒற்றுமை  பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யும் காவல்துறை எடுத்திட வேண்டும். மத நல்லிணக்க, மக்கள் ஒற்றுமை  பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம்...! கலவரம் செய்ய முயல்வோருக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்று உரக்கச் சொல்வோம்...! இவ்வாறு கூட்டறிக்கையில் அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது