tamilnadu

img

மக்களின் போராளியாகத் திகழ்ந்தவர் தோழர் பாலமோகனன்

புதுச்சேரி, மே 10- மக்களின் போராளியாகத் திகழ்ந்தவர் தோழர் பாலமோகனன் என  தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.  புதுச்சேரி தொழிற்சங்க இயக்கத் தின் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த தோழர் சி.எச். பாலமோகனனின் இறுதி  நிகழ்ச்சி திங்களன்று (மே 9) நடை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரசு  ஊழியர் சம்மேளனப் பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,  “எங்களைப் போன்ற பல தோழர் களை உருவாக்கியவர். பலதரப்பட்ட அமைப்புகளை ஒன்றிணைக்கும் பன்மு கத்தன்மை கொண்ட ஆற்றல் மிக்கவர். அவர் இருதய நோயால் அவதிப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சங்க செயல்பாடுகளுக்கு வந்த போது  நடைபெற்ற பேரவையில், தோழர் பால மோகனன் எனது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிட்டது, இறுதி வரை அது புதுவை அரசு ஊழியர் களுக்காகவே துடிக்கும் என்றார். அதே போல் தனது இறுதி மூச்சு வரை செயல் பட்டார் என்று புகழாரம் சூட்டினார்.

ப.செல்வசிங்

மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பேசுகையில், தோழர் வி.பி.சிந்தனுக்கு அஞ்சலி செலுத்த வந்த  மக்கள் கூட்டத்தை நான் பார்த்திருக் கிறேன். அதேபோல் தோழர் பால மோகனனுக்கு தங்கள் இறுதி மரி யாதை செலுத்த மக்கள் கூட்டம் கூட்ட மாய் வந்ததை என்னால் காண முடிந்தது. இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத நிகழ்வு அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக நியமனம் செய்தது, அவரது வரலாற்றுச் சாதனை. ஜிப்மர் மருத்துவமனையில் தினசரி இலவச மருத்துவம் தற்போதும் கிடைக்கிறது என்றால் அது தோழரின் மற்றொரு சாதனையாகும். அவர் தலை மையேற்று நடத்திய போராட்டங்கள் நமக்கு உந்துசக்தியாகவும், வழிகாட்டி யாகவும் இருந்தது என்றார்.

சலீம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் பேசுகை யில், நான் இளைஞராக இருந்த காலத்தில் எங்களைப் போன்ற இளை ஞர்களை ஈர்த்த தலைவர். எளிமையாக வும், நேர்மையாகவும் திகழ்ந்தவர். எதற்கும் அஞ்சாத துணிவு மிக்க போராளி. அனைவருக்கும் முன்னு தாரணமாக இருந்த தொழிற்சங்கத் தலைவர். வளர்ச்சி என்ற பெயரில் தேங்காய்த்திட்டு கிராமத்தை ஆட்சி யாளர்கள் துணையுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாட முயற்சித்த போது, அதை தடுத்து நிறுத்த மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கி புதுச்சேரியை பாதுகாத்த தோழர் என்று புகழஞ்சலி செலுத்தினார். விசிக அமைப்பு செயலாளர் தலை யாரி பேசுகையில், தலித் அல்லாத வர்கள் தலைமை தாங்கும் அரசு ஊழி யர் அமைப்புகள் தலித் ஊழியர்களின் பிரச்சனையை கண்டுகொள்ளாது என்ற நிலையை உடைத்தெறிந்தார். தலித் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண கடைநிலை ஊழியர்கள் வரை, பல  பிரச்சனைகளைத் தனிப்பட்ட முறை யிலும், அமைப்பு சார்ந்தும் வெற்றிகர மாக தீர்த்து வைத்தவர். எங்களுக்கு தலைமை தாங்கிய தலித் அமைப்பு களின் தலைவர்களுக்கு எல்லாம்  முன்னுதாரணமாய் திகழ்ந்தவர் தோழர் பாலமோகனன். அப்பழுக்கற்ற நேர்மையான போராளி என்றார்.

டி.வி.சுப்பிரமணியன் (காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளனம்) பேசுகை யில், காரைக்கால் பகுதி ஊழியர் களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். கோரிக்கைகளை நாங்கள் கைவிட்டாலும், விடாது போராடி உரிமைகளை மீட்டெடுக்கும் வல்லமை பெற்றவர் தோழர் பால மோகனன். அவர் விட்டுச் சென்ற வழித் தடத்தில் பயணிப்போம் என்றார். சோ.பாலசுப்ரமணியம் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பேசுகையில், 1982  ஜன வரி 19  பொது வேலைநிறுத்தப் போராட்ட த்தின் விளைவாக பல ஊழியர்களும், தலைவர்களும் பழிவாங்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் மிரட்டல் விடுத்தும்,  சதிகளின் மூலமும் ஊழியர்களை பணிய வைக்க முயற்சி செய்தனர்.  ஆனால் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்த முடிவில் உறுதியாக நின்றவர். அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டிற்கு எல்லாம் பின்னணியாக இருந்தது மார்க்சியமே ஆகும் என்றார்.

க.முருகன் (சிஐடியு) பேசுகையில், ஒரு பிரச்சனையை எளிதில் புரிந்து கொண்டு அதை கோரிக்கையாக்கி அதை போராட்ட வடிவத்திற்கு கொண்டு செல்வதில் திறன் மிக்கவர்.  ஊழி யர்களின் பிரச்சனைகளுக்காக அவர் எழுதும் கடிதங்கள் மிகத் தெளிவான தாக இருக்கும். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது, அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுப்போம் என்றார். இந்தக் கூட்டத்தில் பிரேம தாசன், ரவிச்சந்திரன், தாட்சாயணி, இரா.கீதா, கிறிஸ்தோபர் ஆகியோரும் பேசினர்.   இறுதியில் தோழர் பாலமோகனன் விட்டுச் சென்ற பணியை, அவர் காட்டிய பாதையில் தொடர்வோம். புதுச்சேரி யில் மதவாத சக்திகளை பின்னுக்குத் தள்ளி இடதுசாரி ஜனநாயக இயக்கங் களின் ஒற்றுமையை வலுப்படுத்தி முன்னேறுவோம் என்று அனைவரும் சூளுரை ஏற்றுக்கொண்டனர்.