tamilnadu

img

பெங்களூருவில் திரண்ட எதிர்க்கட்சிகள் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புதுதில்லி, ஜூலை 17 - கர்நாடகா மாநிலம் பெங் களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், திங்களன்று பெரும் உற்சாகத்துடன் துவங்கியது. ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் 17 கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், இரண்டாவது கூட்டத்தில் கூடுதலாக 9 கட்சிகள் என மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையிலும், 2024 தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்க வும், ஜூன் 23 அன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்,  பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், பாஜக-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் கூட்டாக சந்திப்ப தெனவும், இதுதொடர்பாக பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அடுத்த கட்டத்தில் விவாதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம்,  ஜூலை 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதன்படி திங்களன்று இரவு 7 மணியளவில் முதல்நாள் கூட்டம் துவங்கியது. முதன்முறையாக எதிர்க்கட்சி களின் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் நாடாளு மன்றக்குழுத் தலைவர் சோனியா காந்தி, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கினார். முன்னதாக தலைவர்களை வரவேற்று பெங்களூரு நகரமெங்கும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. செவ்வாயன்றும் கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.