tamilnadu

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு 24 மணிநேர மருத்துவர்கள் தேவை: சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு 24 மணிநேர  மருத்துவர்கள் தேவை: சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர், ஜுன் 2-  குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்த முற்றுகை போராட்டம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.  திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டும். காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திங்கட்கிழமை முதல், இரவு மருத்துவர் பணியில் இருந்து செயல்படுவார். மேலும், 1 வார காலத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடத்தில் மருத்துவர் நியமிக்கப்படுவர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் டி. லெனின் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு தரப்பில் குடவாசல் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.