கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 புதிய தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பபினர் க. சிவகாமசுந்தரி, மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை மேயர் ப. சரவணன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கரூர் மாவட்ட துணை மேலாளர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
