கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “உயர்வுக்குப் படி முகாம்” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஶ்ரீ, முதன்மைக் கல்வி அலுவலர் ப.க. செல்வமணி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.