சென்னை, பிப். 13 - தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 123ஆவது வட்டத்தில் சிபிஎம் வேட்பாளராக எம்.சரஸ் வதி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (பிப்.12) தேனாம்பேட்டை பகுதியில் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கி வைத் ்துள்ளார். இதை ஜெயலலிதா இருந்திருந் ்தால் ஆதரித்து இருக்க மாட்டார். அதை கண்டிக்க தைரியமில்லாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என மிரட்டுகிறார். இதை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தோற்ற பிறகும் அதிமுக பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழக சட்டமன்றத்திற்கு 2024ல் தேர்தல் வரும் எனவும் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறி வருகிறார்.
ஒரேநாடு, ஒரே தேர்தல் என மோடி தூக்கத்தில் உளறுவதெல்லாம் சட்டமாகாது. பாஜகவின் கிளை அமைப் ்பாக அதிமுக மாறியுள்ளதால் அக்கட்சித் ்தலைவர்கள் இதுபோன்று உளறிக் ்கொட்டுகிறார்கள். உள்ளாட்சிகளுக்கு தேர்தலை நடத்தாமல் ஊழல் மயமாக்கி வைத்திருந்தது. கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் பூசப்பட்ட சிமெண்ட் காற்றிலும், தண்ணீரிலும் கரை கிறது. அந்தளவிற்கு ஊழல் செய்து வைத்தி ருந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி வீடுகளில் இருந்து கைப்பற்ற பணம் அனைத்தும் இப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். இப்படி அமைச்சர்கள் மீது வரும் புகார்களை திசைதிருப்ப ஆளுநரை சந்தித்து ஏதாவது கூறி திசை திருப்பு கிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் வென்றத்தைப் போன்று உள்ளாட்சித் தேர்த லிலும் திமுக தலைமையிலான மதச்சார் ்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பிரச்சாரத்தின் போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா.வேலு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, எஸ்.குமார், சுந்தர், பகுதிச் செயலாளர்கள் நந்தனம் மதி (திமுக), ஐ.ஆர். ரவி (சிபிஎம்), திமுக வட்டச் செயலாளர் வில்லவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.