tamilnadu

நகைக் கடன்கள் தள்ளுபடி: அமைச்சர் விளக்கம்

சென்னை,மார்ச் 21- நகைக்கடன்கள் இம் மாதம் 31 ஆம் தேதிக் குள்தள்ளுபடி செய்யப் படும் என்று சட்டப் பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய  அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி பதிலளித்து பேசியதாவது:- கடந்த ஆட்சிக்காலத்தில் நகை கடன் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டுறவு வங்கியிலும் பல கோடி ரூபாய்க்கு போலி நகைகளை வைத்து மோசடி செய்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில் ரூ. 2 கோடி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 1 கோடியே 8 லட்சம், திரு வண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 2 கோடியே 39 லட்சம் காஞ்சிபுரம் மாவட்டம்  உத்திரமேரூரில் ரூ. 2 கோடி, நாமக்கலில் 15 லட்சம் ரூபாய் என்று பல்வேறு மாவட்டங்களிலும் போலி நகைகளை வைத்து பணம் கையாடல் செய்திருக்கிறார்கள். சில இடங்களில்ஏட்டிலே கடன் எழுதி வைக்கப்பட்டு பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளன.  நகைகளை அடகு வைத்து டெபாசிட் செய்திருக் கிறார்கள். சிலர் சேமிப்புக் கணக்கி லும் பணம் போட்டுள்ளனர்.

அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை, கூட்டுறவு நிறுவனங்களில் பணி யாற்றும் பலருக்கும் விதிமுறை களை மீறி நகைக் கடன் கொடுத் ்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு மாவட்டத்தில் ஒரே குடும்பத்திற்கு 18 லட்சம் ரூபாய் நகைக் கடன் கொடுத்துள்ளனர். பயிர்கடன் வைத்து இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்களுக்கு இந்த நகை கடன் தள்ளு படி அனுமதி இல்லை ஆனால், அரசை ஏமாற்றும் உள் நோக்கத்துடன் சுமார் 48 லட்சம் பேருக்கு நகைக் கடன் கொடுக்கப் பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது நடந்துள்ள முறைகேடுகள் குறித்து  தற்போது ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதனை தணிக்கை குழுவும் ஆய்வு செய்தது. கடந்த சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 325 கோடி ரூபாய் 95 ஆயிரம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வருகிற  10 நாட்களுக்குள் 14 லட்சத்து 60 ஆயிரம் பேரின் நகைகடன் தள்ளுபடி  செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

யாரையும் விடமாட்டோம்: முதல்வர்

நகைக் கடன் தள்ளுபடி விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர்,“நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது உண்மைதான். ஆனால், முந்தைய ஆட்சியில் நகைக் கடன் கொடுத்ததில் தவறு நடந்திருக்கிறது. முறைகேடு செய்திருக்கிறார்கள். அதை சரி செய்து வருகிறோம். அரசு அறிவித்தப்படி 5 சவரன் நகைக்கு கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி நிச்சயம் கிடைக்கும்.  தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் பட்டியலை கொடுத்தால் நிச்சயம்  அரசு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும் கடன் தள்ளுபடி  வழங்கப்படும் என்றார் முதல்வர்.