யாழ்ப்பாணம், ஜன.2- புத்தாண்டை (2022) முன்னிட்டு இலங்கை யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு சிறுவன் உள்ளிட்ட 68 இந்திய (இராமேஸ்வரம், ஜெகதாபட்டினம்) மீனவர்களை இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்குமாகாண மீனவர்கள் குழுவினர் சனிக்கிழமை சந்தித்து உலர் உணவுப் பொருட் களை வழங்கினர். அப்போது இந்திய மீனவர்களிடம் பேசிய யாழ்ப்பாணம் மீனவர் சங்கத் தலைவர் எஸ்.அன்னராசா, “இலங்கைக் கடற்பரப்பில் இலங்கை யின் வடபகுதி மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவ தால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங் களை மீனவர்களிடம் தெரிவித்தார். குறிப்பாக இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன் படுத்தியோ அல்லது சட்டவிரோத மாகவோ மீன்பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்னராசா, “ சிறையில் உள்ள மீனவர்கள் எங்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் சக்தி வாய்ந்த நபர்களுக்கு சொந்த மான இழுவைப் படகுகளில் தினக் கூலிகளாக வேலை செய்கின்றனர். அவர்களின் விடுதலைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் அவர்களின் இழுவைப் படகுகளை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், “இந்திய மீனவர்கள் கோரியபடி எந்த இந்திய இழுவைப் படகுகளும் திருப்பித் தரப்பட மாட்டாது, ஆனால் சிறையிலுள்ள மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின் இழுவைப் படகுகள் அரசு சொத் தாக அறிவிக்கப்படும்” என்றார்.
தமிழக மீனவர்களின் சிறைக் காவல் ஜன.4-ஆம் தேதி முடி வடைகிறது. இதற்கிடையில் இலங் கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை ஜனவரி முதல்வாரத் திற்குள் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறி வுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் எனவும் நீதிமன்றம் கடிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சிறையிலுள்ள மீனவர்களை விடு விக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான்காவது வாரத்தில் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.