தூத்துக்குடி, செப்.21 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் டிசம்பர் 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடங்கி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக தூத்துக்குடியில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டினை சிறப்பாக நடத்திடும் வகையில், மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகம் எம்.ஆர். அப்பன் இல்லம், டி.கே.எஸ் நினைவ ரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து துறைவாரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தோழமை சங்கத்தினர் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தே.முருகன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சா.டானியல் ஜெயசிங் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர்கள், மாநில துணை பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர் மற்றும் துறைவாரி சங்கத்தி னர் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து மாநில மாநாடு நடைபெறுவதற்கான விவ ரங்களை தெரிவித்து மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவராக, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஞானராஜ், செயலாளராக தே.முருகன், பொருளாளராக சாம் டானியல்ராஜ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு பணிகளை சிறப்பாக செய்திட மதிப்புறு தலைவர்களாக சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் திரவியம், பேராசிரியர் நாகராஜன் உட்பட 50 பேர் அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட பொருளாளர் மு.தமிழரசன் நன்றி தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம், “திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப் பட்ட சரண்டரை விடுவிக்க வேண்டும். 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். அவுட்சோர் சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி, தமிழகம் முழு வதும் இருந்து அரசு ஊழியர்கள் லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடைபெறு கிறது. மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாள ராக தமிழ்நாடு முதலமைச்சரை அழைத் திட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.