tamilnadu

உலகச் செய்திகள்

அரபு நாடுகளின் உள்விவகாரங்களில் ஈரான் தலையிடுவதாகச் சொல்வது சரியானதல்ல என்று ஈரான் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள் ளது. நான்கு அரபு நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்கள். இத்தகைய அறிக்கைகள் வெளியிடுவது இந்த நாடுகளுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை மீது குண்டுகள் வீசப் பட்டதாகவும், 17 பேர் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்தத் தாக்கு தலின்போது குழந்தைகள் மருத்துவமனைக்குள் சிக்கிக் கொண்டனர் என்றும், பிரசவப் பிரிவின் மீதும் தாக்குதல் நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்நிலை யில், அத்தகைய தாக்குதலைத் தாங்கள் நடத்த வில்லை என்றும், இது தகவல் தொடர்பு பயங்கர வாதம் என்றும் ரஷ்யா விமர்சித்துள்ளது.

தங்கள் நாட்டுக்கு இஸ்ரேலின் ராணுவத் தளபதி மேற்கொண்டுள்ள பயணத்திற்கு எதிராக பஹ்ரெய்ன் நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி யுள்ளனர். பாலஸ்தீன நாட்டை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நிகழ்த்தி வரும் இஸ்ரேலுடன் சுமூகமான உறவை  மேற்கொள்ளக்கூடாது என்ற முழக்கத்தை ஆர்ப் பாட்டங்களில் பங்கேற்றவர்கள் எழுப்பி வரு கிறார்கள்.