tamilnadu

img

தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து விஐடியில் புதிய பி.காம் படிப்புகள் அறிமுகம்

வேலூர், ஏப். 13 - தேசிய பங்குச்சந்தை அமைப்புடன் இணைந்து விஐடி பல்கலைக்கழகத்தில் புதிய பி.காம் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நிதிச் சந்தை மற்றும் எதிர்கால திறன் தேவைக்கேற்ப விஐடியில் உள்ள வணிகவியல் துறையில் வங்கி மற்றும் மூலதன சந்தை, நிதி தொழில்நுட்பம் ஆகிய 2 புதிய பி.காம் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வங்கி மற்றும் நிதித்துறை சம்பந்தமான தொழில் துறைக்கு தேவையான திறன்களை மேம்படுத்தும் வகையில் விஐடி பேராசிரியர்கள் மற்றும் தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இந்த படிப்புக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் புதிய பி.காம் படிப்புகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடம் தேசிய பங்குச்சந்தையின் என்.எஸ்.மார்ட் உடன் இணைந்து விஐடி உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு புதிய பி.காம் படிப்புகளால் வங்கி மற்றும் நிதித் துறையில் சுமார் 1.8 மில்லியன் வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத்தலை வர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, தேசிய பங்குச்சந்தை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அபிலாஷ் மிஸ்ரா, நிர்வாகிகள் ரங்கநாதன், வினோத் ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.