tamilnadu

img

குறுவை சாகுபடியை சமாளிக்கலாம்

சென்னை,செப்.25- காவிரியில் இருந்து தண்ணீர் வந்து  கொண்டிருப்பதால் குறுவை சாகுபடியை சமாளிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு நாடியது .  வினாடிக்கு 5000 கன அடி  நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு  தெரிவித்தது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு  தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதில் அவர் கூறியதாவது:- உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி யில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்திருக்கிறது அதற்கு கீழ்ப்படிய வேண்டியது அரசியல் நெறி அதை அவர்கள் ஏற்பதும் ஏற்காத தும் அவர்கள் விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.