சென்னை, மார்ச் 20 - நீர் நிலைகள், நீர் வழித்தடங்களிள் உள்ள கருவேல மரங்களை உடனடி யாக அகற்றி தங்கு தடை யின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுரு கன் அறிவுறுத்தினார். நீர்வளத் துறை திட்டப் பணிகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஞாயிறன்று (மார்ச் 20) தலைமை செயல கத்தில் உயர் அலுவலர்க ளுடன் ஆய்வு செய்தார். மூன்றாவது நாளாக நடை பெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், துறைச் செய லாளர் சந்தீப் சக்சேனா திட்டப்பணிகளின் முன்னேற் றம் குறித்து விளக்கினார். மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனர மைத்து, தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப் படுத்துதல், புதிய நீர் நிலைகளை உருவாக்குதல், மழை நீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்த அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டு மானங்கள், தடுப்பணை களை உருவாக்குதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டு, முடிக்கப் பட்டப் பணிகள், நிலுவை யில் உள்ளப் பணிகள், அப்பணிகளை நிறை வேற்றுவதில் உள்ள பிரச்சினைகள், வரும் நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட உள்ள திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை குறித் தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றம் பிற துறைகளின் ஒத்து ழைப்பு மற்றும் அனுமதியு டன் நிறைவேற்றப்பட்டு வரும் மற்றும் செயல்படுத் தப்பட வேண்டிய திட்டங்கள், திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் உள்ளப் பிரச்சினைகள், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், எதிர் காலத்தில் புதிய மணல் குவாரிகளை துவக்குதல், நிரந்தர மற்றும் தற்காலிக வெள்ளத்தடுப்புப் பணி களின் முன்னேற்றம் ஆகி யவை குறித்து ஆய்வு செய்ய ப்பட்டது. இவ்வாய்வின் பொழுது பேசிய அமைச்சர், நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களிள் உள்ள கருவேல மரங்களை உடன டியாக அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி விரைந்து செல்லும் வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.