tamilnadu

கள்ளர் சீரமைப்புத்துறை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக!

சென்னை, மார்ச் 27 - கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி ஆசிரி யர்களின் துறை மாறுதல் தொடர்பான கோரிக் கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் வெளி யிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களு க்கு துறைமாறுதல் அளிக்கப்படுவது வழக்க மானது. இந்த துறைமாறுதல் கடந்த பல ஆண்டுகளாக செய்யப்படாத நிலையில் உயர் அலுவலர்கள், அமைச்சர் வரை சந்தித்து பேசியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெள்ளியன்று (மார்ச் 25) மதுரையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தின. இதன்பின்னர் கள்ளர் சீரமைப்புப் பள்ளி களின் இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 4 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இணை இயக்குநர் அலு வலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்புப் போரா ட்டம் நடத்தினர். இதில் 55 பெண் ஆசிரி யர்கள் உட்பட 91 ஆசிரியர்களை நள்ளிரவு காவல்துறை கைது செய்தது. சட்டத்திற்குப் புறம்பாக பெண் ஆசிரியைகளையும் திருமண மண்டபத்தில் இரவு முழுவதும் அடைத்து வைத்தது வன்மையான கண்ட னத்திற்கு உரியது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கள்ளர் சீரமை ப்புத்துறை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனை செய் தவறும் நிலையில், மாநிலம் தழுவிய போராட்ட நடவடிக் கைகளை கூட்டமைப்பு மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.