tamilnadu

img

இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவு

சென்னை, ஜூன் 2- இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறை வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- “1943-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ‘இந்திய தேசிய இராணுவம் (ஐஎன்ஏ) ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102 வயது) மே 31 அன்று மலேசியாவின் செந்துல் நகரில் காலமானார்.  அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அறிக் கையில் துணிச்சலுடன் ஆங்கிலே யர்களை எதிர்த்து போராடிய அஞ்சலை பொன்னுசாமியின் தியா கம் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று கூறியுள்ளார்.

அவரை இழந்து தவிக்கம் அவரது  குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வ தாகவும் அவர் கூறி யுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா வில் பிறக்காவிட்டாலும், வாழா விட்டாலும் 21 வயதே ஆன நிலையில்  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையில் சேர்ந்து கடும் நெருக்கடி மிகுந்த சூழல்களில் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா, மலேசியா இரு நாடு களும் முறையே 1947 மற்றும் 1957  ஆண்டுகளில் விடுதலை பெற்றதைக் கண்டு மகிழ்ந்து நிறைவாழ்வு  வாழ்ந்து அவர் விடைபெற்றிருக் கிறார். வீரம், மனவுறுதி, துணிச்சல்  ஆகிய பண்புகளால் பெண்குலத் துக்கே சிறந்ததோர் எடுத்துக் காட்டாக விளங்கிய அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங் கும்”என்றும் அவர் கூறியுள்ளார்.