tamilnadu

img

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி

சென்னை, பிப். 18- தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சி யாக அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் சார்பில் நடைபெறும் வீடு, மனை விற்பனை கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகை யில் உள்கட்டமைப்புகளை அரசு மேம்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழில் கொள்கைகளையும் அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கப் பட்டுள்ளது.   தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை  என்பது எல்லோருக்குமான வளர்ச்சி யாக அமைய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். மக்கள் அனைவரும் வீட்டு வசதியை பெறு வதற்காக கிராம மற்றும் நகர்ப்புற திட்டங்களை நிறைவேற்றி வருகி றோம்.

குடிசைகள் இல்லாத மாநிலமாக  தமிழ்நாட்டை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி  வருகிறது; மனைப்பிரிவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றைச்சாளர முறையை அரசு செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். இந்தச் சூழலில் நாட்டிலேயே நகர்மய மாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்து கிறோம். குறிப்பாக நகரங்கள், கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்களை உரு வாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இத னால் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங் கள் ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.  வீட்டு வசதி மற்றும்  நகர்புற  வளர்ச்சித்துறை முதன்மை செயலர் அபூர்வா. கிரெடாய் தமிழ் நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன்.சென்னை கிளைத் தலைவர் சிவகுரு நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.