tamilnadu

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம்

புதுதில்லி,மார்ச் 5- உக்ரைனில் இருந்து திரும்பிய  மருத்துவ மாணவர்கள் இனி இந்தி யாவில் படிக்கலாம் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர் களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இந்தியாவில் இருந்து இருபது ஆயிரத்துக்கும் அதிகமான மாண வர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றுள்ளனர். உக்ரைனில் 7 மருத்து வக்கல்லூரிகளில் பெருமபாலான இந்தியர்கள் மருத்துவம் படிக்கின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை முன்வைத்தனர்.  இதையடுத்து இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் 5 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,  உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரண மாக விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியா விலேயே தங்களின் பயிற்சி மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர். அதற்காக வெளிநாட்டில் படித்த‌ மாணவர்கள் எப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பக்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதி யுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம். இந்த பயிற்சிக் காலத்தில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல் மற்ற மருத்துவர்களுக்கு நிகராகவே ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.