மின்சார விபத்தில் 4 மீனவர்கள் பலி கண்ணீரில் மூழ்கிய இனயம் புத்தன்துறை
Cஇனயம் புத்தன்துறை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் மார்ச் 1 சனிக்கிழமை மாலை கோர விபத்து. மின் சாரம் தாக்கி நான்கு மீனவத் தொழி லாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்தி லேயே பலி. விஜயன், ஜஸ்டஸ், சோபன், மைக்கேல் என்ற நான்கு உயிர்களை பறித்த விபத்தால் கடற்கரை கிராமமே கதறி அழுகிறது. திருவிழாவில் கோர விபத்து கோலாகலமாக நடந்துகொண்டி ருந்த ஆலய திருவிழா. மார்ச் 1 அன்று மாலை, கிராமத்தைச் சேர்ந்த மரிய விஜயன் (52), ஜஸ்டஸ் (33), அருள் சோபன் (45), மைக்கேல் பின்றோ என்ற மனோ (40) ஆகிய நான்கு மீனவர்கள் தேர் பவனிக்கான பாதையை சீர்செய்ய ஆலயத்திலிருந்து உயரமான சக்கர ஏணியை எடுத்து வந்தனர். தேர் பாதை யை சீரமைக்கும்போது, திடீரென ஏணி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மீனவர். கணநேரத்தில் நடந்த விபத் தில் நான்கு மீனவர்களும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். அலறியடித்துக் கொண்டு ஓடிய பக்தர்கள் கூட்டத்தால் திருவிழா களமே அமளியில் மூழ்கியது. துயரின் பிடியில் கடற்கரை கிராமம் வருடாந்திர திருவிழாவை சிறப்பாக நடத்த 10 நாட்களாக களைகட்டி வந்த புனித அந்தோணியார் ஆலயம் இன்று துயரத்தில் மூழ்கியுள்ளது. நான்கு தலைமகன்களை இழந்து தவிக்கும் நான்கு குடும்பங்கள். புதுக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட இந்த கடற்கரை கிராமத்தில் இறந்தவர்களின் உடல்கள் அருகில் மக்கள் கூட்டம் கண்ணீரில் அலைமோதுகிறது. விபத்தைக் கண்டவுடன் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டார். அன்றிரவு நடைபெற விருந்த தேர்பவனி நிறுத்தப்பட்டது. உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். பின்னர் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, மார்ச் 2ஆம் தேதி ஞாயிறன்று உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. “தலா 5 லட்சம் ரூபாய்” முதல்வர் நிவாரண அறிவிப்பு “மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். மார்ச் 2 ஞாயிறன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, உடல்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் முன்னிலையில் நால்வரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.20 இலட்சத்திற்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார். “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு எல்லா உதவிகளையும் செய்யும்,” என்று ஆட்சியர் உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மீன்வளம்-மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், பங்குத்தந்தையர்கள், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கண்ணீரில் தொழிலாளர் சங்கம் இந்த சோகமான சம்பவத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் கொல்லங்கோடு பகுதியில் மெழுகு வர்த்தி ஏந்தி உருக்கமான அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் பிராங்கிளின் தலைமையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் அந்தோணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் மற்றும் கொல்லங்கோடு பகுதிக்குழு செயலாளர் அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மீனவ சமூகத்தின் நான்கு துடிப்பான உயிர்களை பறித்த இந்த சோக சம்பவம் முழு கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. புனித அந்தோணியார் ஆலயமும் இன்று மௌனத்தில் மூழ்கியுள்ளது. (ந.நி.)