மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில், தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வரலாற்று மிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், தீர்ப்பை வரவேற்றும், கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.