சென்னை, டிச. 30 - தமிழகத்தில் டிச.31, ஜன.1 ஆகிய 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் டிச.31 அன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புத்தாண்டு அன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.